பெண்கள் முன்னேற்றத்திற்கான தெரபத் மஹிலா மண்டல் சார்பில் "ஸ்ரீ உட்சவ் 2017"


சமூகத்தில் மாற்றம் உருவாக்குவதற்கான தீர்வை வழங்குவதில் இலாப நோக்கமற்ற நிறுவனமாக தெரபத் மஹிலா மண்டல் செயல்படுகிறது. இதில் ஸ்வஸ்த் பரிவார் ஸ்வஸ்த் சமாஜ், கனியா சூரகாஷா யோஜனா, மருத்துவ முகாம்கள், கிராமப்புறங்களில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது போன்ற பல்வேறு முயற்சிகளால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த அமைப்பு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது.



இந்த ஆண்டு டி.எம்.எம், ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ தொடங்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் ஏ.கே.எஸ். நகர், தெரபந்த் ஜெயின் பானில் ஜூன் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு "ஸ்ரீ உட்சவ் 2017" நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், 55 கடைகளில் காலணிகள், துணிகள், குழந்தை தயாரிப்புகள், சுற்றுச்சூழல் பசுமைப் பொருட்கள் மற்றும் இன்னும் பலவகையான கைவினைப்பொருட்கள் என கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இது குறித்து டிஎம்எம் செயலாளர் மோனிகா லுமியா பேசுகையில்; "நாங்கள் டிஎம்எம்லிருந்து பல்வேறு சமூகநலத் திட்டங்களை செய்து வருகிறோம், நாங்கள் முதன் முறையாக ஸ்ரீ உட்சவ் 2017 எக்ஸ்போவை ஏற்பாடு செய்திருக்கிறோம், இந்த வகையான  எக்ஸ்போ பெண்கள் தொழில்முயற்சியாளர்களுக்கான புதிய தளத்தை வழங்க உதவுகிறது. கொங்கு பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தொழில் முனைவோர் உள்ளனர். ஸ்வச்ச் பாரத் அபிஹானுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த எக்ஸ்போ எங்களுக்கு தேவையான நிதி திரட்ட உதவும் என நாங்கள் நம்புகிறோம். என்றார்.

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...